பொன்னொளிப் பள்ளிக்கூடத்தில் படித்து வந்த சந்துரு ஒரு நாள் பெரிய மூக்குக் கண்ணாடி போட்டான். மற்ற குழந்தைகள் அவனை கேலி செய்ததால் அழுதான்.
"மிஸ், எனக்கு மட்டும் ஏன் கண் கெட்டு பலவீனமாகி விட்டது?" என்று அழுது கொண்டே கமலா டீச்சரிடம் கேட்டான்.
அவனை அன்போடு சமாதானப் படுத்திய கமலா டீச்சர், "சந்துரு கண்ணா, பலவீனம் என்று எதுவுமே இல்லை. எல்லாமே பலம்தான். தேவையான நேரத்தில் பலவீனம் பலம் என்பது புரியும்," என்றார்.
ஒரு நாள் கமலா டீச்சர் எல்லா குழந்தைகளையும் சுற்றுலாவிற்காக ஒரு காட்டிற்கு அழைத்துச் சென்றார்.