ஜன்னல் வழியே வீதியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ரகுவின் பின்னால் சத்தமின்றி வந்து நின்ற சுபா, "திரும்பிப் பாருங்களேன்," என்றாள்.

தன்னை தன் கணவனுக்காக கவனமாக அலங்கரித்துக் கொண்டு, புன்னகையோடு நின்றிருந்த புத்தம்புது மனைவியைத் திரும்பிப் பார்த்த ரகு உற்சாகமானான். சுபாவின் இடையைத் தன் வலது கையால் வளைத்துத் தன்னருகே இழுத்துக் கொண்ட ரகு, "தேவதையைப் பற்றிக் கதைகளில் படித்திருக்கிறேன். உன்னைப் பற்றித்தான் அந்தக் கதைகளில் எழுதி இருப்பார்கள் என்று நினைக்கிறேன்," என்றான்.

மழை தூறிக்கொண்டிருந்தது. ரிக்ஷா மாரிக்குச் சீக்கிரமாகச் சவாரி கிடைத்தால் தேவலைபோலிருந்தது. இப்போதே மணி சாயந்திரம் ஆறாகிவிட்டது. காலையில் சாப்பிட்ட நீராகாரம் எவ்வளவு நேரம் தாங்கும்?

நமக்கெல்லாம் வறுமை என்றால் என்னவென்று நன்றாகத் தெரியும். எத்தனை சினிமாக்களில் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம்! எத்தனை வறுமை ஒழிப்புத் திட்டங்களைப் பற்றிப் பேப்பரில் நுணுக்கமாகப் படித்திருக்கிறோம்!

சுத்தம் என்றால் சிங்கப்பூர் தான் நமக்கு நினைவுக்கு வரும். சிங்கப்பூருக்கு பலமுறை சென்றுவந்திருந்ததால் நானும் சுத்தத்திற்கு உரைகல் சிங்கப்பூர் தான் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அந்த மாயை நியூஸிலாந்தில் காலடி வைத்ததும் உடனடியாக விலகிவிட்டது.

நம்மூர்ப் பெரியவர்கள் "நாமாக ஏற்படுத்திக்கொள்ளும் நல்ல எண்ணத்திற்கும், தானாகவே சுயம்புவாக இருக்கும் நல்ல எண்ணத்திற்கும் ஏராளமான வித்தியாசம் உண்டு" என்று அடிக்கடி சொல்வார்கள். அதன் சாரம், நியூஸிலாந்தின் மண்ணிலும், மண்ணின் மைந்தர்களிடமும் இயற்கையாகவே ஊறிப்போயிருந்த சுத்தத்தைப்பார்த்ததும் புரிந்தது.

ஒரு வாரமாகவே தேவிகாவின் முகம் வாடி இருந்தது. 'என்ன விஷயம்' என்று கேட்டு அவளை மலரச் செய்ய வேண்டும் என்று குமரனுக்கு ஆர்வம் இருந்தாலும், கேட்க சிறிது தயக்கமாக இருந்தது.

அவள் பாட்டுக்கு 'புதிய நகை வேண்டும், பட்டு சேலை வேண்டும், உங்கள் அம்மாவோடு பேசுவதை குறைத்துக் கொள்ள வேண்டும்,' என்பது போன்ற வில்லங்கமான கோரிக்கைக் கணைகளைத் தொடுத்தால் என்ன செய்வது என்ற பயம்தான் தயக்கத்திற்கான காரணம்.

Turn all things to honey; this is the law of divine living.

அனைத்தையும் தேனாக மாற்று; அதுவே இறைவாழ்வின் சட்டம்.

I am not a Jnani, for I have no knowledge except what God gives me for His work. How am I to know whether what I see be reason or folly ? Nay, it is neither; for the thing seen is simply true and neither folly nor reason.

நான் ஞானி அல்ல. ஏனென்றால் இறைவன் தம் வேலையின் பொருட்டு  எனக்குத் தருவதைத் தவிர வேறு ஞானம் என்னிடம்  இல்லை. நான் காண்பது காரணமா அல்லது முட்டாள்தனமா என்பதை நான் எவ்வாறு அறிவது?   நான் காண்பது உண்மை. அவ்வளவுதான். முட்டாள்தனமோ  அல்லது காரணமோ அல்ல.

When I speak, the reason says, "This will I say"; but God takes the word out of my mouth and the lips say something else at which reason trembles.

நான் பேசும்போது, "நானிதைச்  சொல்வேன்" என்று காரணவாதம் கூறுகிறது; ஆனால் இறைவன் என் வாயிலிருந்து வார்த்தையை எடுத்துவிட, உதடுகள் வேறொன்றைக் கூறுகின்றன. அதைக் கேட்டு காரணவாதம்  நடுங்குகிறது.

Inspiration is a slender river of brightness leaping from a vast and eternal knowledge, it exceeds reason more perfectly than reason exceeds the knowledge of the senses.

அகத்தூண்டல் பரந்த நித்திய ஞானத்திலிருந்து பாயும் மெல்லிய பிரகாசமான நதி. புலனறிவை மீறும் காரணவாதத்தை விட அதிக நேர்த்தியாக  காரணவாதத்தை அகத்தூண்டல் மீறுகிறது.  

There are two allied powers in man; knowledge and wisdom. Knowledge is so much of the truth seen in a distorted medium as the mind arrives at by groping, wisdom what the eye of divine vision sees in the spirit.

ஞானம், விவேகம் என்ற இரு கூட்டணி சக்திகள் மனிதனில் உள்ளன. மனம் எதையும் தட்டுத் தடுமாறி கண்டடைவதால் ஞானம் என்பது சிதைந்த ஊடகத்தின் வழியே காணப்படும் உண்மையே. இறைபார்வை கொண்ட விழி பேரான்மாவில் எதைக் காண்கிறதோ அதுவே விவேகம்.

பார்த்த முதல் கணமே
என் ஜீவனின் தலைவனாகவும்
என் இறைவனாகவும்
நான் அறிந்தவனே!
என் காணிக்கையை ஏற்றுக் கொள்.

என் எண்ணங்கள்
என் உணர்ச்சிகள்
என் இதயத்தின் மிகையுணர்வுகள்
என் புலனுணர்வுகள்
என் வாழ்வின் இயக்கங்கள்
அனைத்தும் நீயே.

என் உடலின்
ஒவ்வொரு அணுவும் நீயே.
என் குருதியின்
ஒவ்வொரு துளியும் நீயே.

நான் முழுமையாக, மொத்தமாக
உனக்கு மட்டுமே உரியவள்.
நான் மிச்சமீதியின்றி
உனக்கு மட்டுமே சொந்தமானவள்.

நான் எதுவாக வேண்டுமென
நீ விருப்புறுதி கொள்கிறாயோ
நான் அதுவாக ஆவேன்.