சமர்ப்பணன்

பார்த்த முதல் கணமே
என் ஜீவனின் தலைவனாகவும்
என் இறைவனாகவும்
நான் அறிந்தவனே!
என் காணிக்கையை ஏற்றுக் கொள்.

என் எண்ணங்கள்
என் உணர்ச்சிகள்
என் இதயத்தின் மிகையுணர்வுகள்
என் புலனுணர்வுகள்
என் வாழ்வின் இயக்கங்கள்
அனைத்தும் நீயே.

என் உடலின்
ஒவ்வொரு அணுவும் நீயே.
என் குருதியின்
ஒவ்வொரு துளியும் நீயே.

நான் முழுமையாக, மொத்தமாக
உனக்கு மட்டுமே உரியவள்.
நான் மிச்சமீதியின்றி
உனக்கு மட்டுமே சொந்தமானவள்.

நான் எதுவாக வேண்டுமென
நீ விருப்புறுதி கொள்கிறாயோ
நான் அதுவாக ஆவேன்.