தாத்தா வந்த இரண்டாவது நாள் நானும், ஜமுனாவும் சித்தப்பாவின் வக்கீலைப் போய் பார்த்தோம். வக்கீல் இல்லை. வயதான உதவியாளர்தான் இருந்தார்.
அவருக்கு என்னை தெரிந்திருந்தது. ஜமுனாவை தெரியவில்லை. என் மனைவி என்றபோது உடனடியாக நம்பவில்லை. ‘எங்களுக்கு பத்திரிகை வரவில்லையே. பின் உனக்கு எப்படி கல்யாணம் ஆகியிருக்க முடியும்? உண்மையிலேயே மனைவிதானா? ஆதாரமில்லையே?’ என்று சந்தேகப்பட்டார்.
நாங்கள் சித்தப்பாவை சந்தித்த மறுநாளே சித்தப்பா வக்கீலை சந்தித்து வழக்கை முடிக்க சொன்னாராம்.