தாத்தா கிளம்பிச் சென்ற பின் மண்டபமே காலியாகி விட்டது போலிருந்தது. பனிரெண்டு மணிக்கு மண்டபத்தில் தாத்தா குடும்பத்தினரையும், மதுரை மாமா குடும்பத்தினரையும் தவிர எவருமே இல்லை.
‘கோவிலுக்கு போய்விட்டுத்தான் வீட்டிற்கு போக வேண்டும் என்று சொன்னீர்களே கவர்னசத்தை’ என்றேன்.
‘நம் வீடுதான் கோவில். பரமா, இனி எந்த கோவிலுக்கும் போக வேண்டாம். எந்த பூசாரியின் உறவும் வேண்டாம். மாசிலாமணியால் நான் சபையில் பட்ட அவமானம் போதும். இனி எல்லோரையும் ஓட, ஓட விரட்டி நான் யார் என்று காட்டுகிறேன்’ என்று வெறுப்போடு சொன்னார் கவர்னசத்தை.