மூன்று நாட்கள் கழித்து மதியம் மதுவண்ணாரிடமிருந்து போன் வந்தது. ‘இப்போதே ஜமுனாவை அழைத்துக் கொண்டு வா’ என்றார்.
‘இப்போதேவா?’ என்றேன்.
‘வர முடியாதோ? வேலையில்லாமல்தானே இருக்கிறாய்? வா’ என்றார்.
‘தாத்தாவைப் பற்றிய தகவல் ஏதாவது கிடைத்திருக்குமோ?’ என்று போகும் வழியில் ஜமுனாவிடம் கேட்டேன்.
‘சொத்து பற்றி பேசப் போகிறோம்’ என்றாள் ஜமுனா.
‘எதை வைத்து அப்படி சொல்கிறாய்?’ என்று கேட்டேன்.
‘தாத்தா பற்றிய விஷயம் என்றால் இத்தனை அவசரமாக என்னையும் வர சொல்லி இருக்க மாட்டார்கள்’ என்றாள் ஜமுனா.