மாலையில் ஜமுனா பழனியப்பன் சார் வீடு வரை போய் வரலாம் என்று என்னையும், சுந்தரத்தையும் அழைத்தாள்.

‘திருடன் வந்து விட்டு போனானே. அதை சரி செய்ய வேண்டும்’ என்றாள் ஜமுனா.

‘அதற்கு இவர் என்ன செய்ய முடியும்? ஏதாவது கேட்க வேண்டுமென்றால் அவரை வர சொல்வோம். பொதுவாக முதலாளிகள், தொழிலாளிகள் வீட்டிற்கு போவதில்லை’ என்றான் சுந்தரம்.

அதை சொல்லும்போதே அவன் பேச்சை ஜமுனா கேட்கப்போவதில்லை என்பது தெரிந்ததால் ‘சரி, போகலாம்’ என்றான் சுந்தரம்.

எங்கள் வருகையை பழனியப்ப சாரும், அவர் குடும்பத்தினரும் எதிர்பார்க்கவில்லை.

சிறு குடும்பம்தான். மனைவி, மகள்.

சுந்தரம் பரபரப்புடன் வீட்டிற்குள் நுழைந்தான்.

‘அத்தான், அத்தான்’ என்று கூவினான்.

ஜமுனா காய்கறிக் கடைக்குப் போயிருந்தாள். நான் அப்போதுதான் குளியலறைக்குள் நுழைந்து கொண்டிருந்தேன்.

‘பிரான்சிலிருந்து ஒரு கடிதம் வந்திருக்கிறது’ என்று கூவினான் சுந்தரம்.

‘மேஜை மீது வைத்துவிட்டு போ. நான் குளித்துவிட்டுப் பார்க்கிறேன்’ என்றேன்.

நாங்கள் சூளைமேடு வீட்டிற்கு வந்தபின், வீட்டை தினமும் சுத்தம் செய்யும் மல்லிகா முழு நேர வீட்டு வேலையாளாக மாறிவிட்டாள். நாங்கள் ஆங்கில செய்தித்தாள் மட்டுமே வாங்கினோம். தமிழ் செய்தித்தாளாக  மல்லிகா இருந்தாள்.

தரையை துணியால் துடைத்தபடி ‘அக்கா, கனப்பாக்கம் மயானத்தில் பேய் நடமாட்டம் இருக்கிறது’ என்றாள் மல்லிகா.

உள்ளறையில் உட்கார்ந்து வாசித்துக் கொண்டிருந்த என்னை ‘கனப்பாக்கம், மயானம்’ என்ற சொற்கள் மல்லிகா சொல்லப் போவதை கவனிக்கத் தூண்டின.

‘உனக்கெப்படி தெரியும்?’ என்று கேட்டாள் ஜமுனா.

மறுநாள் முருகவேளை வரச் சொல்லி சுந்தரம் போன் செய்த அரைமணி நேரத்திற்குள் முருகவேள் அம்பத்தூரிலிருந்து வந்துவிட்டார்.

கம்பனி அலுவலகத்தில் நானும், சுந்தரமும் அவரை சந்தித்தோம். உட்கார சொல்லி பலமுறை கூறிய பிறகுதான் எங்கள் முன் உட்கார்ந்தார்.

‘ஜெர்மனிகாரன் நீங்கள் செய்த யந்திர உதிரிப் பொருட்கள் நன்றாக இருப்பதாக சொல்கிறான். நீங்கள் மேனுவல் லேத்தில் கையால்தான் இதை செய்கிறீர்கள் என்று சொன்னால் நம்ப மறுக்கிறான். உயர்தர ஆட்டோமேட்டிக் யந்திரத்தில் செய்தால்தான் இவ்வளவு துல்லியமாக. கச்சிதமாக செய்ய முடியும் என்கிறான்’ என்றான் சுந்தரம்.

அன்றிரவு ராணுவ அலுவலகம் சென்று வந்ததைப் பற்றி வெகு நேரம் சிரித்துப் பேசிக் கொண்டிருதோம். தூக்கம் வரவில்லை. பதினோரு மணிக்கு எதிர்பாராமல் ஆட்ரிக்கிடமிருந்து போன் வந்தது.

‘உங்கள் வலைதளத்தை கவனமாகப் பார்த்தேன். எங்கள் கம்பனி பொருட்களுக்கும் உங்கள் கம்பனிக்கும் நேரடியான எந்த சம்பந்தமும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை’ என்றார் ஆட்ரிக்.

‘பரவாயில்லை, இன்றில்லாவிட்டாலும் எதிர்காலத்தில் ஏதேனும் வாய்ப்பு வரலாம்’ என்றாள் ஜமுனா.

கூடத்தில் ஆங்கில செய்தித் தாளை தரையில் விரித்து பார்த்துக் கொண்டிருத்தாள்.

ஜமுனா. தினமும் அடுப்பில் எதையாவது வைத்து விட்டு, இப்படித்தான் செய்தித் தாளை புரட்டிக் கொண்டிருப்பாள்.

‘என்னங்க, சுந்தரத்தை கூப்பிடுங்களேன்’ என்றாள் ஜமுனா.

ஜன்னல் வழியே தெரிந்த சுந்தரத்தை கையசைத்து அழைத்தேன்.

‘இந்தியா நேற்று புதிய செயற்கைகோள் அனுப்பி இருக்கிறதாம்’ என்றாள் ஜமுனா.

‘எத்தனையோ தடவை அனுப்பி விட்டார்களே’ என்றான் சுந்தரம்.

தினகரனின் அலுவலகம் சென்றோம். பாகப் பிரிவினை பற்றியும், கம்பனி நிலவரம் பற்றியும் கூறினேன்.

சுந்தரம் நகையை பற்றிக் கூறி ‘என்ன செய்யலாம்?’ என்று கேட்டான்.

‘விற்க வேண்டாம் பேங்க்கில் கேட்கலாம். மார்க்கட் மதிப்பிற்கு பாதி கிடைக்கும்’ என்றான் தினகரன்.

‘அது போதாதே! விற்று விடலாம்’ என்றான் சுந்தரம்.

‘தாலியும், நகையும் உன் மாமனார் செய்து தந்தது. வெளியே சொல்லவில்லை என்றாலும் அவர் மனது அவருக்கே தெரியாமல் கொஞ்சம் வருத்தப்படும்’ என்றான் தினகரன்.

‘எனக்கே வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் பணம் வேண்டுமே. அக்கா சொன்னால் சொன்னதுதான்’ என்றான் சுந்தரம்.

கம்பனி அலுவலகத்திற்குள் நானும் சுந்தரத்தோடு சென்று சிறிது நேரம் இருந்து விட்டு வீட்டிற்கு வந்து விட்டேன். அலுவலகத்திற்குள் காலையில் நுழைந்த சுந்தரம், பல மாதங்களாக பிரிக்கப்படாமலிருந்த கடிதங்களை பிரித்து வாசித்து விட்டு கணக்குப் புத்தகங்களையும், தடிதடியான கோப்புகளையும் பார்த்துக் கொண்டிருந்தான். நான் அவற்றையெல்லாம் ஒரு முறை கூட பார்த்ததே இல்லை. பின் தன் செல்போனில் கணக்கரை கம்பனிக்கு வரச் சொல்லி பேசிக் கொண்டிருந்தான். இன்னும் எத்தனை பேருடன் பேசினானோ!

நான் காலையில் விழிக்கும்போது ஏழாகி விட்டது. ஜமுனாவை பல முறை அழைத்தும் பதில் வரவில்லை. முன்கதவை திறந்து பார்த்தேன். வீட்டை சுற்றிப் பார்த்தேன். ஜமுனாவைக் காணவில்லை. பின்கட்டிற்கு சென்று முகம் கழுவிக் கொண்டிந்த போது, சற்று தள்ளியிருந்த கம்பனி கட்டடத்திற்குள் முக்காலி மேல் நின்று ஜமுனா ஒட்டடை தட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.

கைதட்டி அழைக்கலாமா என்று நினைத்தபோது என்னை திரும்பிப் பார்த்தவள் முக்காலியிலிருந்து குதித்து இறங்கி என்னருகே வந்தாள். தூசியாலும், ஓட்டடையாலும் அபிஷேகம் செய்யப்பட்டிருந்தாள்.

‘கைகழுவி விட்டு காபி தருகிறேன்’ என்றாள் ஜமுனா.

வீடு திரும்பி உடை மாற்றிக் கொண்டிருந்தபோது, ஓடுகளின் இடைவெளி வழியே கசிந்த மழைநீரின் துளியொன்று ஜமுனாவின் நெற்றியில் விழுந்து மெல்ல உருண்டது.

‘உமா தேவியை விட அழகாக இருக்கிறாய்’ என்றேன்.

சேலை மாற்றிக் கொண்டிருந்த ஜமுனா நிமிர்ந்து பார்த்தாள். ‘இதுவரை சொன்னதே இல்லையே! யாரவள்?’ என்றாள்.

‘சிவபெருமான் சம்சாரம்’ என்றேன்.

‘ஓ அவளா!’ என்றாள் ஜமுனா.