மாலையில் ஜமுனா பழனியப்பன் சார் வீடு வரை போய் வரலாம் என்று என்னையும், சுந்தரத்தையும் அழைத்தாள்.
‘திருடன் வந்து விட்டு போனானே. அதை சரி செய்ய வேண்டும்’ என்றாள் ஜமுனா.
‘அதற்கு இவர் என்ன செய்ய முடியும்? ஏதாவது கேட்க வேண்டுமென்றால் அவரை வர சொல்வோம். பொதுவாக முதலாளிகள், தொழிலாளிகள் வீட்டிற்கு போவதில்லை’ என்றான் சுந்தரம்.
அதை சொல்லும்போதே அவன் பேச்சை ஜமுனா கேட்கப்போவதில்லை என்பது தெரிந்ததால் ‘சரி, போகலாம்’ என்றான் சுந்தரம்.
எங்கள் வருகையை பழனியப்ப சாரும், அவர் குடும்பத்தினரும் எதிர்பார்க்கவில்லை.
சிறு குடும்பம்தான். மனைவி, மகள்.