மறுநாள் முருகவேளை வரச் சொல்லி சுந்தரம் போன் செய்த அரைமணி நேரத்திற்குள் முருகவேள் அம்பத்தூரிலிருந்து வந்துவிட்டார்.
கம்பனி அலுவலகத்தில் நானும், சுந்தரமும் அவரை சந்தித்தோம். உட்கார சொல்லி பலமுறை கூறிய பிறகுதான் எங்கள் முன் உட்கார்ந்தார்.
‘ஜெர்மனிகாரன் நீங்கள் செய்த யந்திர உதிரிப் பொருட்கள் நன்றாக இருப்பதாக சொல்கிறான். நீங்கள் மேனுவல் லேத்தில் கையால்தான் இதை செய்கிறீர்கள் என்று சொன்னால் நம்ப மறுக்கிறான். உயர்தர ஆட்டோமேட்டிக் யந்திரத்தில் செய்தால்தான் இவ்வளவு துல்லியமாக. கச்சிதமாக செய்ய முடியும் என்கிறான்’ என்றான் சுந்தரம்.