‘உங்களுக்கு எல்லோரும் திரும்பக் கிடைத்து விட்டார்கள். சந்தோஷம்தானே?’ என்று கேட்டாள் ஜமுனா.
‘எனக்கு உன்னைத் தவிர வேறெவரும் வேண்டாம், வேறெதுவும் வேண்டாம்’ என்றேன்.
‘மனிதர்களின் உறவுக்காக, அவர்களின் அன்பிற்காக நீங்கள் ஆசைப்படுவீர்களே’ என்றாள் ஜமுனா.
‘போன ஜென்மத்தில் அந்த அற்ப ஆசை இருந்தது. உன்னைப் பார்த்த பிறகு புது பிறவி எடுத்து விட்டேன். இப்போது நீ மட்டும்தான் என் உலகம். யாதுமாகி நிற்கிறாயே காளி!’ என்றேன்.
நாக்கை நீட்டி கண்களை உருட்டினாள் ஜமுனா.
‘அடுத்து என்ன செய்யலாம்?’ என்று கேட்டாள் ஜமுனா.