அகச்சுமை

பொன்னொளிப் பித்தரிடம் ஒரு சீடன் கேட்டான், "என் அகத்தில் எதுவுமே இல்லை. என்ன செய்வது?"

"எல்லாவற்றையும் வெளியே கொட்டி விடு," என்றார் பொன்னொளிப் பித்தர்.

"என்ன இது! நான்தான் என்னுள் ஒன்றுமே இல்லை என்கிறேனே?" என்றான் சீடன் .

"அப்படியானால், எல்லாவற்றையும் சுமந்து கொண்டேயிரு!" என்றார் பொன்னொளிப் பித்தர்.

(மறுஆக்கம் செய்யப்பட்ட சென் கதை)