சுந்தரம் பரபரப்புடன் வீட்டிற்குள் நுழைந்தான்.
‘அத்தான், அத்தான்’ என்று கூவினான்.
ஜமுனா காய்கறிக் கடைக்குப் போயிருந்தாள். நான் அப்போதுதான் குளியலறைக்குள் நுழைந்து கொண்டிருந்தேன்.
‘பிரான்சிலிருந்து ஒரு கடிதம் வந்திருக்கிறது’ என்று கூவினான் சுந்தரம்.
‘மேஜை மீது வைத்துவிட்டு போ. நான் குளித்துவிட்டுப் பார்க்கிறேன்’ என்றேன்.