Consecrated at the feet of Sri Aurobindo and The Mother.
* * * *

All's miracle here and can by miracle change.
அனைத்தும் இங்கு அற்புதமே.
எதுவும் இங்கு அற்புதமாக மாறும்.

* * * *

Thousands of average men and women with simple, ordinary skills have created prosperity in their life through entrepreneurship, have solved their financial problems and are making money. All these successful persons are, without an exception, like you and me. If an average next door neighbor can make money through self-employment, why not you? 

குளிருக்குப் பயந்து சூரியன் வெளி வரத் தயங்கிக் கொண்டிருந்த இருள் பிரியாத அதிகாலை நேரத்தில் அழைப்பு மணி ஒலித்தது. பேப்பர் போடும் பையனை எதிர்பார்த்துக் கதவைத் திறந்த எனக்கு பகீரென்றது.

வாயாவி வள்ளியப்பன் வாயெல்லாம் பல்லாக கொண்டிருந்தார். இவர் என் மனைவியின் ஒன்று விட்ட சித்தப்பா. ஆனால், எல்லோரும் இவரை வாயாவி மாமா என்றுதான் அழைப்பார்கள்.

‘உங்களுக்கு எல்லோரும் திரும்பக் கிடைத்து விட்டார்கள். சந்தோஷம்தானே?’ என்று கேட்டாள் ஜமுனா.

‘எனக்கு உன்னைத் தவிர வேறெவரும் வேண்டாம், வேறெதுவும் வேண்டாம்’ என்றேன்.

‘மனிதர்களின் உறவுக்காக, அவர்களின் அன்பிற்காக நீங்கள் ஆசைப்படுவீர்களே’ என்றாள் ஜமுனா.

‘போன ஜென்மத்தில் அந்த அற்ப ஆசை இருந்தது. உன்னைப் பார்த்த பிறகு புது பிறவி எடுத்து விட்டேன். இப்போது நீ மட்டும்தான் என் உலகம். யாதுமாகி நிற்கிறாயே காளி!’ என்றேன்.

நாக்கை நீட்டி கண்களை உருட்டினாள் ஜமுனா.

‘அடுத்து என்ன செய்யலாம்?’ என்று கேட்டாள் ஜமுனா.

மறுநாள் மின்னஞ்சல் ஒன்று வந்திருந்தது. தாத்தா எழுதியிருந்தார். ஜமுனாவைத் தேடினேன். அவள் தாத்தாவின் சைக்கிளை துடைத்துக் கொண்டிருந்தாள். அவள் வரும்வரை காத்திருந்தேன்.

‘படிக்கவில்லையா?’ என்றாள் ஜமுனா.

‘உனக்கு வந்த கடிதம்’ என்றேன்.

‘வாசித்து விட்டு என்னிடம் கொடுங்கள்’ என்றாள்

கடிதத்தை வாசித்து விட்டு அவளிடம் கொடுத்தேன். அவள் வாசித்தபின் மீண்டும் நான் வாசித்தேன்:

‘அனைவரின் அன்பிற்கும் உரிய ஜமுனாவிற்கு,

உன்னைத் தவிர வேறெவருக்கும் கடிதம் எழுதத் தோன்றவில்லை.

அன்று மாலை வீட்டு வாசலில் கார்கள் வந்து நிற்கும் ஓசை கேட்டு ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தேன். ஆனால் கார்கள் கிளம்பி விட்டன. சற்று நேரம் கழித்து அதே கார்கள் திரும்பி வந்தன. சுற்று சுவர் கதவைத் திறந்து கொண்டு நான்கைந்து பேர்கள் வருவது தெரிந்தது. உருவத்தையும், நடையையும், உடையையும் பார்த்தால் அரசியல்வாதிகள் போலத் தெரிந்தது. ஒருவர் மேல்கோட்டு போட்டு ஏதோ பெரிய கம்பனி நிர்வாகி போலிருந்தார். வீடு மாறி வந்துவிட்டார்களா என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே அழைப்புமணி பலமாக ஒலிக்கத் தொடங்கியது.

மறுநாள் மதியம் நான் சாப்பிட வந்தபோது ‘சுந்தரம் எங்கே காணோம்? காலையிலிருந்து கம்பனிக்கு வரவில்லையே?’ என்று கேட்டேன்.

‘மதுரைக்கு போயிருக்கிறான். அப்பா வேலையை விட்டு விட்டு சொந்தமாக டியூஷன் சென்டர் ஆரம்பிக்கப் போகிறாராம்’ என்றாள் ஜமுனா.

‘பூகோளம் சொல்லி தரப் போகிறாரா?’ என்று ஆச்சரியத்துடன் கேட்டேன்.

‘அவர் பாடம் நடத்த மாட்டார். நான்கைந்து பேரை வேலைக்கு வைத்து அறிவியலும், கணக்கும் ஒழுங்காக சொல்லித் தரப் போகிறார். நிர்வாகத்தை மட்டும் பார்த்து கொள்வார். கடைசியாக வாங்கிய சம்பளத்தை விட பல மடங்கு அதிகமாக சம்பாதிக்க முடியும் என்று நினைக்கிறார்’ என்றாள் ஜமுனா.

செய்தித்தாளில் ‘சட்டசபையில் அமளி – கனப்பாக்கம் மயானத்தை மூடக் கோரி எதிர்கட்சிகள் ஆர்ப்பாட்டம்’ என்ற செய்தி வந்திருந்தது.

அன்றொரு நாள் ஆளுங்கட்சிக்காரர்களே ஆளுங்கட்சிக்கு எதிராக கோஷம் போட்டார்கள். அதுவே ஏனென்று இன்னமும் புரியவில்லை. அடுத்த புதிராக இப்போது இந்த செய்தி. ஆளுங்கட்சிக்காரர்கள் எதை செய்தாலும் அதற்கு எதிராகத்தானே எதிர்கட்சிக்காரர்கள் ஏதாவது செய்வார்கள்? ஆனால். மயான விஷயத்தில் எப்படி இரண்டு பேரும் ஒன்றானார்கள்? மயானத்தை மூட வேண்டும் என்று ஆளுங்கட்சிக்காரர்கள் சொன்னால் மூடக்கூடாது என்றுதானே எதிர்கட்சிக்காரர்கள் சொல்ல வேண்டும்? எனக்கு புரியவில்லை.

உள்ளறையில் துணிகளை மடித்துக் கொண்டிருந்த மல்லிகா ‘உங்களை நினைத்தால் எனக்கு ரொம்ப கவலையாக இருக்கிறது அக்கா’ என்றாள்.

‘எப்போதும் உன்னை பற்றி மட்டும்தானே கவலைப்படுவாய்?’ என்றாள் ஜமுனா.

‘அது என்னவோ அக்கா, இந்த வீடு என் வீடு மாதிரி என்ற நினைப்பு வந்து விட்டது. அதனால்தான் கனப்பாக்கத்தில் இருக்கும் நம் நிலத்தை பற்றி நான் கேள்விப்படுவதெல்லாம் கவலையைத் தருகிறது’ என்றாள் மல்லிகா.

‘விஷயத்தை சொல். கவலைப்படுவதா வேண்டாமா என்று அப்புறம் முடிவெடுக்கிறேன்’ என்றாள் ஜமுனா.

நானும் ஜமுனாவும் வீட்டிற்குள் நுழைந்தோம். சுந்தரம் கம்பனிக்குள் சென்றான். ஓரிரு நிமிடங்களில் சுந்தரம் கம்பனியிலிருந்து வீட்டிற்கு கிட்டத்தட்ட ஓடியே வந்தான். கையில் ஒரு கடிதம். ‘அத்தான், பிரஞ்சு கம்பனிகாரன் சரி என்று சொல்லி விட்டான்’ என்றான்.

‘அடுத்து சாப்ட்வேர் செய்ய தேவைப்படும் பணம் வரும் வழியை கண்டுபிடிக்க வேண்டுமா?’ என்றேன்.

‘முன்பணம் தருகிறேன் என்று சொல்லி இருக்கிறான்’ என்ற சுந்தரம் கடிதத்தை ஜமுனாவிடம் நீட்டினான். அதை வாங்கி என்னிடம் தந்தாள் ஜமுனா.

‘நீயே படி’ என்றேன்.

ஜமுனா கடிதத்தை உரக்க வாசித்தாள்.

‘அன்பிற்குரிய திரு.பரமார்த்தன்,